districts

img

போக்குவரத்து ஊழியர்களை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடுக

சென்னை, டிச. 14- பணியின் போது பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை தாக்குப வர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் 57ஆவது மாநாடு ஓட்டேரியில் தோழர் என்.சங்க ரய்யா நினைவரங்கில் தலைவர் ஆர். துரை தலைமையில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (டிச. 12, 13) நடைபெற்றது. சங்கக் கொடியை துணைத் தலை வர் ஜெ.செங்குட்டுவன் ஏற்றி வைத்தார். துணைப் பொதுச் செயலாளர் வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.பரமசிவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி. அன்பழகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் வி.தயானந்தம் வேலை அறிக்கையையும், ஏ.ஆர்.பாலாஜி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், துணைத் தலைவர் எம்.சந்திரன், சிஐடியு வடசென்னை மாவட்டச்செயலாளர் சு.லெனின்சுந்தர், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். துணைத் தலைவர் கே. சுப்பிரமணியன் நன்றி கூறினார். முன்னதாக பெரம்பூர் பணி மனையிலிருந்து மாநாட்டு ஓட்டேரி வரைபேரணி நடை பெற்றது.

தீர்மானங்கள்

பேருந்தில் ஓட்டுநருக்கு எதிரே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை சாலை தெரியும் வகையில் முன்பக்கம் பொருத்த வேண்டும், சாதாரண பேருந்து களை கூடுதலாக இயக்க வேண்டும், படிக்கட்டுகளில் பயணிப் போரை எச்சரிக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்களை தாக்குபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், 30 விழுக்காடு பேருந்து களில் நிலவும் பிரேக் பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும். கேண்டினில் தரமான உணவு வழங்க வேண்டும், புதிதாக ஊழி யர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்த முறை யில் தொழிலாளர்கள் பணியமர்த்து வதை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15ஆவது ஊதியக் குழு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் மேலாண் இயக்குநரிடம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக ஆர்.துரை, பொதுச்செயலாளராக வி.தயா னந்தம், பொருளாளராக ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டு 35 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.