காஞ்சிபுரம், மே 3 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் காஞ்சிபுரம் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் வி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஒன்றிய துணை அமைப்பாளர் ஆர்.மணிகண்டன் வரவேற்றார். ஒன்றிய அமைப்பாளர் வி.பாக்கியராஜ் வேலை யறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டை மாநில துணை செயலாளர் கே.பி.பாபு துவக்கி வைத்தும், மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி நிறைவு செய்தும் பேசினர். மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை, ஆர்.மது சூதனன், பி.பி.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்க வேண்டும், நூறுநாள் வேலைக்கு மாற்றுத் திறனாளிகளுக் கென சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும், காஞ்சிபுரம் விளையாட்டு அரங்கில் மாற்றுத் திறனா ளிகளுக்கு பயிற்சியாளரை கொண்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. 12பேர் கொண்ட ஒன்றி யக்குழுவிற்கு தலைவராக ஆர்.மணிகண்டன், செய லாளராக வி.பாக்யராஜ், பொருளாளராக ஆர். ரேணுகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.