districts

img

ஆத்தூர் ஊராட்சியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, டிச.19- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ளது ஆத்தூர் ஊராட்சி மன்றம். இங்குள்ள மேட்டாத்தூர் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 60,000 லிட்டர் கொள்ள ளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும். பரமநத்தம் கிராமத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், கோட்ட யம் பாளையம் கிரா மத்தில் நிலவும் குடிநீர் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வாக திறந்தவெளி கிணற்றை ஆழப்படுத்த வேண்டும். பிள்ளையார்குப்பம் கிரா மத்தில் கரும்பு அலுவலகம், நடுத்தெருக்களில் தடை யில்லாமல் குடிநீர் கிடைக்க கேட் வால்வு அமைத்து தினமும் குடி நீர் வழங்க வேண்டும். ஆத்தூ ரில் பொதுமக்கள் பயன் படுத்தும் சுடுகாடு ஆக்கிர மிப்பை அகற்றி சுற்றுச் சுவர் அமைத்து தர வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பிள்ளையார் குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் இ.அல மேலு, ஒன்றிய செயலாளர் டி.எஸ். மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.