districts

img

கடலூர் மாவட்ட அளவில் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பை துவக்க முடிவு

கடலூர்,மே 7- கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட அளவில் குடியிருப்போர்சங்கம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் குடியிருப்போர் கூட்டமைப்பின்பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், தலைவர் பாலு பச்சைப்பன், நிர்வாகிகள் தேவநாதன், நடராஜன், கோபால், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மற்றும் கடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம் ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்போர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவாக அனைத்து குடியிருப்பு நல சங்கங்களின் கூட்டமைப்பு கடலூர் மாவட்டம் என்ற பெயரில் சங்கம் துவக்குவதென முடிவு செய்யப்பட்டது.  மாவட்ட அமைப்பின் சிறப்பு தலைவராக எம்.மருதவாணன், தலைவராக நெய்வேலியைச் சார்ந்த குடியிருப்பு சங்கத்தின் பொறுப்பாளர் முத்துவேல், செயலாளராக கடலூர் குடியிருப்போர் கூட்டமைப்புசார்ந்த வெங்கடேசன், பொருளாளராக கடலூர் குடியிருப்போர் கூட்டமைச் சார்ந்த வெங்கட்ரமணி  உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக பாலு பச்சைப்பன் நன்றி கூறினார்.