சென்னை, ஜன. 2 - சென்னை மாநகரில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்கப்படு கிறது. இதன்மூலம் 16 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 3 கோடி பேர் பயனடைந்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று (ஜன.2) 17ஆவது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 15 லட்சத்து 16 ஆயிரத்து 804 பேர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முதல் தவணையாக 4 லட்சத்து 20 ஆயிரத்து 98 பேரும், இரண்டாவது தவணையாக 10 லட்சத்து 96 ஆயிரத்து 706 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தமிழ கத்தில் இதுவரை 86.95 விழுக்காடு பேருக்கு முதல் தவணையாகவும், 60.71 விழுக்காடு பேருக்கு இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 30ஆயிரம் பரிசோதனைகள் இதுகுறித்து செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபரா தம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப் படும். இதற்கென மண்டலத்திற்கு 2 குழுக்கள் வீதம் 15 மண்டலங்க ளுக்கு 30 குழுக்கள் நியமிக்கப்பட் டுள்ளது. தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக 20 கார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப் பட உள்ளன. சென்னையில் நாளொன்று 25 ஆயிரம் என்ற பரி சோதனை இலக்கு 30 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றார்.