சென்னை, நவ. 28- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை யின் மத்திய சென்னை மாவட்டம், புழல் அடுத்த விநாயகபுரம் சுற்றுவட்டார வியா பாரிகள் நல சங்கம் சார்பில் பேரவையின் நிறுவனத்தலைவர் த.வெள்ளையன் படத்திறப்பு விழா விநாயகபுரம் மூர்த்தி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். செயலாளர் வி.கமலநாதன் வர வேற்றார். தங்கம் வெள்ளையன், கொளத்தூர் எவர்வின் பள்ளி குழும தாளாளர் புருஷோத்தமன், பேரவை தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் த.வெள்ளையன் உருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாகன வாடகை கட்டணத்திற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. முன்பு கொடி நாள் நன்கொடையை விருப்பப்பட்டு கொடுப்போம். ஆனால் இப்போது கட்டாய நன்கொடையாக்கி வசூல் செய்கிறார்கள். மின்சார கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. வியா பாரிகள் செலுத்தும் வாடகைக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. எனவே ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து வரும் டிசம்பர் 3ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். இதில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம் என்றார். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கந்தன், வெஸ்மர்காந்தன் வெள்ளையன், எஸ்.பீர்முகமது, வியாசை மணி, பா.தேவ ராஜ், சங்கத்தின் பொருளாளர் முரளிதரன், கூடுதல் செயலாளர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் கே.ஸ்ரீராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.