districts

img

கிரேன் விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

அரக்கோணம், ஜன. 23- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நெமிலி கீழ வீதி கிராமத்தில் ஆண்டு தோறும் தை மாதம் திரு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை(ஜன.23) நடைபெற்றது. அப்பேது, நேர்த்திக்கடனுக்காக பலர் அலகு குத்திக்கொண்டு கிரேனில் தொங்கியபடி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கிரேன் திடீரென கவிழ்ந்தது. இதில் அந்த ரத்தில் தொங்கியபடி வந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஜோதி பாபு (17) கீழே விழுந்து பலியானார். இந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழி லாளி முத்து (42),  ஐஸ் வியா பாரி பூபாலன் ஆகியோர் மீதும் கிரேன் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். மேலும் திருத் தணியை சேர்ந்த கதிர் (19), பெரப்பேரியை சேர்ந்த சின்னசாமி ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். அனை வரையும் மீட்டெடுத்த நெமிலி காவல் நிலைய காவ லர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். இதில் கதிர், சின்னசாமி ஆகியோர் மேல் சிகிச் சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் சிகிச்சை பல னின்றி சின்னசாமி இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.