கள்ளக்குறிச்சி, செப்.20 - உளுந்தூர்பேட்டை அருகே செம்மனந்தல் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக ஓபிசி அணி மாவட்ட துணை தலைவரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான முருகன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது குச்சிப்பாளையம்.இந்த கிராமத்தில் ஏரி மண் அடிப்பது தொடர்பாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் என்பவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் பாஜக கள்ளக்குறிச்சி மாவட்ட ஓபிசி அணி மாவட்ட துணை தலைவருமான முருகன் என்பவரிடம் கேட்டபோது, முருகன் கிராம நிர்வாக அலுவலர் தரக்குறைவாக பணி செய்ய விடாமல் அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகியான முருகனை கைது செய்தனர்.