திருவண்ணாமலை, ஜன. 16- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பட்டியலின மக்க ளுக்கு வழிபாட்டு உரிமை நீண்டகாலமாக மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு ஜனவரியில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் ஆகியோர் தலைமையில் பட்டிய லின மக்கள் கடந்த ஜனவரி 30 அன்று கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒரு பிரிவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முத்துமாரியம்மன் கோயில் மூடப்பட்டது. கடந்த 8 மாதமாக கோயில் பூட்டிக் கிடந்தது. பட்டியலின மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தண்டராம்பட்டு வட்டச் செயலாளர் அண்ணாமலை தலை மையில் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.