புதுச்சேரி,செப்.30- கோவில்களில் தலித் மக்கள் வழி பாட்டு உரிமையை வலியுறுத்தி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் தலித் மற்றும் பழங்குடியின மக்களை வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசின் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் சீர் செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வேண்டும். தலித் மக்களுக்கு இலவச மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டி கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டை போன்ற நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க சட்டம் இயற்ற வேண்டும். 1964 ஆம் ஆண்டு ஆதாரத்தை கேட்டு தலித் மக்களுக்கான அரசு திட்டங்களில் உள்ள உரிமைகளை மறுப்பதை அரசு கைவிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் துவக்கி வைத்தும் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் முடித்து வைத்தும் பேசி னார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சரவணன், நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், உமா விநாயகம், ராமசாமி, ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், சங்கர், சீனிவாசன், ஆனந்த், பிரவீன், உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.