districts

img

இலவச வீட்டு மனை பட்டா: ஆட்சியரிடம் தலித் மக்கள் கோரிக்கை

விழுப்புரம்,நவ.27- விழுப்புரம் அருகே கொளத்தூர் கிராம தலித் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்தை சேர்ந்தது கொளத்தூர் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட தலித்  குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறர்கள். அவர்கள், தங்கள் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டு மனையில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இடநெருக்கடியால் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வசிக்கிறார். இந்த நிலத்திற்கு இதுவரைக்கும் அரசு வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என்றும் உடனடியாக அனைத்து வீட்டிற்கும் பட்ட வழங்க வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.