சென்னை, நவ.27- சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம், புழல் நீரேற்று நிலையம், சூரப்பட்டு நீரேற்று நிலையம், வீராணம் நீரேற்று நிலையம், செம்பரம்பாக்கம் நீரேற்று நிலையம், நெம்மேலி நீரேற்று நிலையம், மீஞ்சூர் நீரேற்று நிலையம் ஆகிய கடல் நீரை குடி நீராக்கும் நிலையங்கள் மூலமாக மக்களுக்கு தினந் தோறும் 1000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் தினந்தோறும் 300 இடங்களில் குடி நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பருவ மழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு பாது காப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னை குடிநீர் வாரியத்தால் தினந் தோறும் நீரேற்று நிலையங்கள்மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத் தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12 லட்சம் குடி யிருப்புகளுக்கு இதுவரை 10 லட்சத்து 40 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப் பட்டு வருகிறது. பொதுமக்கள் பருவமழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும். மேலும் உரிய இடைவேளையில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொது மக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம். எனவே, பருவ மழையினால் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் மேற் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.