districts

img

சிலிண்டர் வெடித்து வீடு சேதம்

புதுச்சேரி,நவ.4- புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள அப்பாவு நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் சண்முகப்பிரியா  வீட்டின் மேல் மாடியில் அமைக்கப்பட்டிருந்த சமையல் கொட்டகையில் தண்ணீரை கொதிக்க வைக்க கேஸ் சிலிண்டரை  பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் அடுப்பில் பற்றாத தீ  சிலிண்டரில் நேரடியாக  எரிந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த சண்முகப்பிரியா தீயை அணைக்க முடியாமல் கீழ் தளத்திற்கு ஓடி வருவதற்குள் சிலிண்டர் வெடித்ததில் சமையல்  கொட்டகை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. அத்துடன் அருகில் இருந்த டி.வி.,ஏ.சி.,வாஷிங் மெஷின்,பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்கள் தீயில் கருகியது. இத்தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் விபத்து அப்பகுதியில் உள்ள மக்களிடம்  பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.