ரிக்சா தொழிலாளர்களுக்கு இலவச பேட்டரி ரிக்சா வழங்க கோரி சைக்கிள் ரிக்சா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் ஜி.அப்பன்ராஜ், பி.லிங்கம் தலைமையில் கவுரவத் தலைவர் மு.சம்பத், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் ஆர்.அழகேசன், எஸ்.குப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.