districts

img

இ-பைலிங் முறையை முழுமையாக திரும்ப பெறக்கோரி கடலூர் மாவட்ட அனைத்து வழக்கறிஞர்

இ-பைலிங் முறையை முழுமையாக திரும்ப பெறக்கோரி கடலூர் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பார் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் பாபு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் காத்தவராயன், நூலகர் சதீஷ்குமார், மூத்த வழக்கறிஞர்கள் தமிழரசன், மாசிலாமணி, திருமார்பன், சச்சிதானந்தம், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, நிர்வாகிகள் யுவராஜ், நாகவேந்தன் மற்றும் வழக்கறிஞர்கள் சீதாராமன், ஜோதிலிங்கம், கோபி, சுபாஷ், செந்தில்குமார், செல்வகுமார், புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.