சென்னையில் உள்ள ஆஷா நிவாஸ் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் சி.ஆர்.எஸ் சேவை மையங்கள் இணைந்து சென்னையில் தேபர்நகர், சூளைமேடு,வாழைமாநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இதனை சமுதாய வளர்ச்சி அலுவலர் லில்லி ஜோஸ்பின், சிஆர்எஸ் பிரதிநிதி அஞ்சனா ஆகியோர் வழங்கினர். இதில் ஆஷாநிவாஸ் பணியாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.