சிதம்பரம், ஆக. 16-
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே திருநாறையூர் கிராம குளத்தில் சுமார் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இருப்பதை பார்த்த மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்த னர். சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலை மையில் பிரபு, அன்புமணி, ஞானசேகர், அலமேலு, புஷ்ப ராஜ், பாண்டியராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பிடித்து வக்கராமாரி ஏரியில் விட்டனர்.
மழை காலங்களில் ஏரியில் இருந்து வெளியேறி வாய்க்கால் வழியாக நீர்நிலைகளில் தஞ்சமடையும் முதலைகள் சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக் குள் புகுந்து விடுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.