districts

img

மருத்துவ காப்பீடு குளறுபடிகளை கண்டித்து

மருத்துவ காப்பீடு குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில் செவ்வாயன்று (ஆக.6) ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர். கிருஷ்ணகிரியில் மாவட்ட தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்றது . மாவட்ட துணை தலைவர் சரவணபவன்,செயலாளர் முருகன், பட்டு வளர்ச்சிக்கு துறை மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசலு, கெம்பண்ணா(கல்வித்துறை), ரவிச்சந்திரன்(வருவாய்த்துறை), ராஜாமணி(வனத்துறை), பழனிசாமி(ஐடிஐ), கோவிந்தசாமி (நில அளவைத் துறை), தேன்மொழி(அங்கன்வாடி)  உள்ளிட்ட ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.