districts

சென்னை முக்கிய செய்திகள்

கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை  முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள்

சென்னை, அக். 8- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப் படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதுவரை இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தி யுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா  தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் போட்டி யில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,  இங்கிலாந்து உட்பட 10 அணிகள் பங்கேற் கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா ஞாயி றன்று (அக். 8) தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதனால்  2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்தப்போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அக்டோபர் 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் வசதிக்காக சிறப்பு  ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் போட்டி நடைபெறும் 5 நாட்களும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி  வரை போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி விக்டோரியா ஹாஸ்டர் ரோடு, பாரதி சாலை, வாலாஜா  சாலை மற்றும் பெல்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வரும் வாகனங்களும், போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி  சிலை வழியாக வரும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும்  என காவல்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கூட்டநெரிசல் அதிகம்  இருக்கும் பகுதியில் வாகன ஓட்டிகள் கவன முடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

தாம்பரம் முதல் கடற்கரை வரை 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை, அக். 7- சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் 44 மின்சார ரயில்கள் தண்ட வாள பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிறன்று  (அக். 8) ரத்து செய்யப்பட உள்ள தாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்களை பொறுத்தவரை சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய 4 மார்க்கங்களில் இயக்கப்படுகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் பயணிகள் என அனைவரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், விமான  நிலையம், முக்கிய ரயில் நிலையங்களை மின்சார ரயில்கள் இணைப்பதால் எப்போ தும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்நிலையில், அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்த பணிகளால் பல ரயில்கள் கிட்டதட்ட 3 மணி நேரம் முழுமை யாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (அக். 8) 44 மின்சார ரயில்களின் சேவை  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

3 நடைமேடைகளுடன் ரூ. 20 கோடியில்  கிளாம்பாக்கம் ரயில் நிலையம் டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

சென்னை, அக். 7- கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.20 கோடியில் புதிய  ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்க  உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தை தெற்கு ரயில்வே கோரியுள்ளது. சென்னை, வண்டலூர் அருகே கிளாம் பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே, பயணிகளின் வசதிக்காக  தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வே டெண்டர் கோரியுள்ளது. இந்த ரயில் நிலையம் புறநகர் ரயில்கள் நின்று செல்லும் வகையில் மூன்று  நடைமேடைகளுடன் அமைய உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணி களை ஒரு ஆண்டிற்குள் முடிக்க தெற்கு ரயில்வேதிட்டமிட்டுள்ளது. 17 ரயில் நிலையங்களை  மேம்படுத்த திட்டம் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 17 ரயில் நிலையங்களை மூன்றாவது கட்டமாக மேம்படுத்த உள்ளது. இதன் மூலம்  அனைவரையும் உள்ளடக்கிய ரயில் நிலையங்களை உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை கடற்கரை எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி முழு வேகத்துடன் நடை பெற்று வருகிறது. இதில் எந்த குறைபாடும்  இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் நான்காவது வழிதடப் பணிகள் நிறைவடையும் என்றும் தெற்கு ரயில்வே  சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் 

சென்னை, அக்.8- இஸ்ரேல் மற்றும் பால ஸ்தீன வாழ் தமிழர்கள், அவர்களின் குடும்பத்தினர்   +91-87602 48625; +91-99402 56444; +91-96000 23645 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ரயில் மோதி பள்ளி மாணவன் பலி

சென்னை, அக். 7- கொருக்குப்பேட்டை கைலாசா செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகன் லோகேஷ் (17). இவர் 12ஆம் வகுப்பு முடித்து, மேல் படிப்பு படிக்க இருந்தார். இந்நிலையில் வெள்ளிக் கிழமை இரவு லோகேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள ரயில் தண்டவாளத் தில் நடந்து சென்று கொண்டி ருக்கும் போது, அந்த வழியாக வந்த மின்சார ரயில் மோதியது. இதில் பலத்த காயம டைந்த லோகேசை பொது மக்கள் மீட்டு ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை இறந்தார். இதுகுறித்து கொருக்குப் பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாய கிணற்றில் பெண் சடலம்

ராணிப்பேட்டை, அக்.7 -  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேலபுலம் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் 48 வயதுடைய பெண் சடலம் மிதந்தது.  தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணைக்காக காவல்துறை அதிகாரிகளி டம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அந்த சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்து மனைக்கு கொண்டு சென்ற னர். கிணற்றில் சடலமாக இருந்தவர் வி. ராணி (வயது. 48) என்பது தெரிய வந்துள்ளது.

சாமந்தி பூ விலை வீழ்ச்சி:  

கிருஷ்ணகிரி,அக்.6- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் சாமந்திப்பூ விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் செடி களை டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர். சமீப நாட்களாக சாமந்திப்பூ விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.. ஒரு கிலோ 20 ரூபாய் 30 ரூபாய் என போட்டி போட்டு விற்கும் நிலைக்கு விவ சாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். இதனால் கவலை அடைந்த பல விவ சாயிகள்  பூக்களை பறிக்கா மல் டிராக்டர்களைகொண்டு அழித்து வருகின்றனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பண்டிகை கால ‘ஊக்கத்தொகை புதுச்சேரி அரசுக்கு சிஐடியு கோரிக்கை 

புதுச்சேரி, அக்.7- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பண்டிகை கால ஊக்கத்தொகை ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சிஐடியு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஜி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் முதல்வர் நாராயண சாமி  தலைமையிலான அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்திற்கான உத்தரவை பிறப்பித்தது.  அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த என். ஆர். காங்கிரஸ், பி.ஜே.பி. கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமியிடம்  அரசு உத்தரவை அமல்படுத்தி அமைப்பு சாரா நல வாரியத்தை முறைப்படி உரு வாக்கி அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சிஐடியு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. புதுச்சேரியில் பல மாதங்களாக ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் முறைசாரா தொழி லாளர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்து வதே சிரமமாக உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு அமைப்புசாரா நல சங்கத்தின் மூலம் ரூ.5,000 பண்டிகை கால உதவித்தொகை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று சிஐடியு வலி யுறுத்துகிறது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 17 ல் சட்டமன்றம் நோக்கி நடை பெறும் போராட்டத்தில் அனைத்து பகுதி தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் சிஐடியு அரை கூவல் விடுக்கிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.