சென்னை, செப். 4- சாலையோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடை பெறுகிறது. இதற்கான இந்திய அணிக்காக விளையாடும் வீராங்கனைகளை நீதிபதி அறிமுகப்படுத்தினார். சாலையோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல்முறையாக நடைபெற்றது. அதில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள கருணாலயா தொண்டு நிறுவனத்தில் வசிக்கும் தெரு வோர குழந்தைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டு உலகக் கோப்பையை வென்று வந்தனர். அதேபோல் 2023ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 15 நாடுகள் கலந்து கொள்கிறது. இதில் இந்தியா சார்பில் கருணாலயா தொண்டு நிறுவனத்தில் பரா மரிக்கப்பட்டு வரும் தெருவோர குழந்தைகள் அணியின் எட்டு பேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், பிரான்ஸ் துணைத் தூதர் ஹார்வர் பெல் ஆண் செட் மற்றும் கருணாலயா தொண்டு நிறுவன செயலாளர் பால் சுந்தர் சிங் ஆகியோர் விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்தினர். இந்த போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா இங்கிலாந்து. அங்கோரி. வங்கதேசம் மொரிசியஸ் நேபாளம் தென்னாப்பிரிக்கா புருண்டி இலங்கை உகாண்டா, ருவாண்டா தான்சானியா, பிரேசில், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு மூன்று பெண்கள், மூன்று ஆண்கள், இருவர் மாற்று என 8 பேர் விளையாடுகிறார்கள். இந்த விளை யாட்டு போட்டி ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலில் நடைபெறுகிறது. 20ஆம் தேதி முதல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.