districts

img

இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி கிரிக்கெட் போட்டி

சென்னை,  ஜன.25- ‘இளம் இதயங்களை பாதுகாத்திடுங்கள்’ என்னும்  தனது இதய ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக தனியார் நிறுவன பணியாளர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி  வியாழனன்று (ஜன.25)   துவங்கியது. ‘ரோட்டரி, தொழில் வளாக உற்பத்தியாளர் சங்கம் (கும்மிடிப்பூண்டி), சோழவரம் முதல் ஸ்ரீசிட்டி மனிதவள மன்றம்  மற்றும்  அலமேலு அறக்கட்டளை (புற்றுநோய் விழிப்புணர் வுக்காக)” உடன் இணைந்து சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனை இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. இந்த போட்டியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற  உறுப்பினரும் டிஜெஎஸ்  குழும கல்வி நிறுவனங் களின் தலைவருமான டி.ஜே. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரசாந்த் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் - டாக்டர் பிரசாந்த்  கிருஷ்ணா, தலைமை நிர்வாக அதிகாரி  டாக்டர் பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   இதய ஆரோக்கியத் தைப் பேணுவதன் முக்கி யத்துவத்தை வலியுறுத் தும் விதமாக 14 நாட்கள்  நடைபெறும் இந்தப் போட்டியில் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்கின்றன.