திருவண்ணாமலை, டிச.4- மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டுமான பணிகளில், லஞ்சம் ஊழல் நடைபெற்றள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால், மாவட்ட ஆட்சியர் வளமையின் சுற்றுச்சுவர், நீதிமன்ற வளாக சுற்றுச்சுவர் ஆகியவை இடிந்து விழுந்துள்ளது. இதனால் அரசு பணிக ளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தண்டராம்பட்டு பெண்கள் பள்ளி, தென்முடியனூர் அரசுப்பள்ளி, வட ஆண்டாப்பட்டு சேரியந்தல் பள்ளி ஆகிய அரசுப் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் மாண வர்களின் கல்வித்திறன் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடி யில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், 90 ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பாலம் கடந்த 2.9.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா கண்ட 90 ஆவது நாளான டிசம்பர் 1 இரவு இந்தப் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் பெரும்பகுதி தென்பெண்ணை ஆற்றில் வந்த தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால், தொண்டமானூர், தென்முடி யனூர், மூங்கில்துறைப்பட்டு, தண்டராம் பட்டு, ராயண்டபுரம், அல்லப்பனூர், பி.குயிலம், எடத்தனூர், திருவடத்தனூர், புத்தூர் செக்கடி, கிருஷ்ணாபுரம், சதா குப்பம், வாழவச்சனூர், இளையாங்கண்ணி, பெருந்துறைப்பட்டு உள்ளிட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் இருக்கும் பொதுமக்கள் தொண்டமானூர் கிராமத்துக்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ப.செல்வன் விடுத்தள்ள ஒரு அறிக்கையில் கூறி யிருப்பதாவது: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கட்டுமான பணிகள் தர மில்லாமல் கட்டப்பட்டுள்ளது. பொது மக்களின் வரிப்பணம், அரசு பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. எனவே, தரமில்லாத கட்டுமானங்களை அமைத்த ஒப்பந்ததாரர் மீதும், தர மில்லாத கட்டுமானங்களை சரிவர கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்தப் பணத்தை மீளப்பெற வேண்டும், இனி வரும் காலங்களில் பொது கட்டுமான பணிகள் உரிய தரத்து டன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.