districts

img

நோய்பரவலை தடுக்க கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்துக

திருவள்ளூர், டிச 10- தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் வீடுகளுக்குள் பிளிச்சிங் பவுடர் தெளிப்பது மற்றும் கிராமங்களிலேயே மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுத் தெரு 11 வது வார்டில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 23 குடும்பங்களில் 130 பேர் வசிக்கின்றனர். தற்போது பெய்த மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால்  அனைத்து குடியிருப்புகள் உள்ளேயும் வெள்ள நீர் புகுந்ததால் குடிசை களில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. ஊசி, பாசிமணி, குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள், சீப்பு, கண்ணாடி போன்ற பொருட்களை விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் மழை நீர் குடிசைக்குள் சென்றதால், குடிசை சேறும் சகதியுமாக இருக்கிறது. இதனால் இம்மக்கள் படுக்க கூட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இரவு  நேரத்தில் பள்ளி கூடம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தங்கலாம் என்றால், காவல்துறையினர் அனுமதிப்பதில்லை என்கிறார்கள். குழந்தைகளை வைத்துக்  கொண்டு கொசுக்கடியில் மரண வேதனையை அனுபவிப்பதாகவும் கூறு கின்றனர். மற்றவர்களுக்கு ஏதாவது உதவிகள் கிடைக்கிறது. குழந்தை களுக்கு பால், ரொட்டி வாங்க கூட காசு  இல்லாமல் தவிக்கிறோம் என தாய்மார்கள்  புலம்புகின்றனர். ஏதாவது உதவிகள் கிடைக் குமா என ஏக்கத்துடன் பார்க்கின்றனர். ஆரம்பாக்கம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆரம்பாக்கம் ஊராட்சியில் ஆயிரக்கணக் கான மக்கள் வசிக்கின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர், ஜீவா நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்க ளும் வாழ்கின்றனர். மீன் பிடி வலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு  வரு கின்றனர். இப்படி வாழ்ந்து வந்தவர்களின் வீடுகளில் மழைநீர் புகுந்து சேறும் சகதியுமாக இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.   உடனடியாக வீடுகளின் உள்ளே பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.  மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வலியறுத்தியுள்ளார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு  உறுப்பினர்கள் ரஹிமா, முகமது சாதிக்,  ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ஆனந்தன், கிளைச் செயலாளர் கபிர்பாஷா, ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற 8 வார்டு உறுப்பினர் அ. தமிமுனிஷா ஆகியோர் ஆரம்பாக்கம் ஜீவா நகர், கணபதி நகர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மேட்டுத் தெருவில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் ஆத்துப்பாக்கத்தில் உள்ள மலைக் குறவன் ஆகிய   அம்மக் களை சனிக்கிழமையன்று (டிச 9), நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். இந்த மக்களின் கோரிக்கைகளை  மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.