districts

img

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

திண்டிவனம் அரசு கோவிந்தராஜ் கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், யுஜிசி அறிவித்த  ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். புதனன்று சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.