districts

img

சோத்துப்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி சிபிஎம் கையெழுத்து இயக்கம்

செங்கல்பட்டு,பிப்.9- சோத்துப்பாக்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் அமைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. செங்கல்பட்டு ரயில்வே  சந்திப்பு முதல் மேல்மரு வத்தூர் இடையிலான ரயில் பாதையில் ரயில்வே  கேட் எல்சி 74 சோத்துப் பாக்கம், செய்யூர்,  வந்த வாசி சாலையில் அமைந் துள்ளது. இந்த ரயில்வே கேட்டை தினசரி நூற்றுக் கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்கி றது. மேலும் பள்ளி,கல்லூரி மாணவர்கள், வேலை மற்றும் மருத்துவமனை அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் தினசரி இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர். ரயில்கள் வருவதை ஒட்டி அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் அவதிக்கு  உள்ளாகின்றனர்.  இந்நிலை யில் எல்சி 74 ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளது. உடனடியாக நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் அமைத்து பொதுமக்களின் அவதியை போக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத் துள்ளது. இதனைத் தொடர்ந்து சிபிஎம் சார்பில் சோத்துப் பாக்கம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைத் திட வலியுறுத்தி கையெ ழுத்து இயக்கம் நடை பெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.புருஷோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.வெள்ளிகண்ணன், கிளை செயலாளர்கள் ஐயப்பன் விநாயகர்மூர்த்தி, அரிவராசன் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின்  சித்தாமூர் ஒன்றிய செயலா ளர் ராமசாமி பொருளாளர் பிரதாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.