கடலூர், ஜன.28- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தொழிற்சங்க ஸ்தாப தலைவர், நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.கோவிந்தராஜன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலை வர்களில் ஒருவரான ஷாஜாதி கோவிந்த ராஜன் ஆகியோரது நினைவு தினத்தை யொட்டி, நெல்லிக்குப்பத்தில் உள்ள நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்ப ராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், பகுதிச் செயலாளர் ஸ்டீபன் ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ஜெய பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.தட்சிணாமூர்த்தி, ஜி.பாஸ்கரன், ஏ.பாபு, என்.தேசிங்கு, மூத்த வழக்கறிஞர் சமிக்கி ராஜ் (மகள்), மருத்துவர் தாரா, மூத்த நிர்வாகி ஆர்.வி. சுப்பிரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.