திருவள்ளூர், ஜூன் 4-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயி றன்று (ஜூன் 4) ஆர்.கே.பேட் டையில் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.பெருமாள் தலைமை தாங்கினார்.கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் வாழ்த்தி பேசினர். மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால் நிறை வுரையாற்றினார்.
9 பேர் கொண்ட வட்டக் குழுவின் புதிய செயலா ளராக வழக்கறிஞர் ஏ.சிவ பிரசாத் தேர்வு செய்யப் பட்டார். ஆர்.கே.பேட்டை ஊராட்சி செல்லாத்தூர் காலனியில் கழிவுநீர் கால் வாய் அமைக்க வேண்டும், எஸ்.டி.கண்டிகைக்கு தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அமைத்து கொடுக்க வேண்டும், அம்மனெரியில் மலை புறம்போக்கில் வாழும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண் டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.