districts

img

சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தாட்சாயணி காலமானார்

புதுச்சேரி,ஏப்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் த.தாட்சா யணி திடீரென்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் த.தாட்சாயணி திங்களன்று (ஏப்.29) இரவு மூச்சு திணறல்  ஏற்பட்டு உடல்நலம்  பாதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவரை  புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே  இறந்து விட்டதாக தெரிவித்த னர். அதனை தொடர்ந்து புதுச்சேரி நயினார் மண்டபம் பகுதியில் உள்ள அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் மலரஞ்சலி செலுத்தி னார்.  பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். ரேசன் கடை திறக்க போராட்டம் புதுச்சேரியில் மூடப்பட்ட ரேசன் கடை களை திறந்து அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தது. கடந்த  மார்ச் மாதம் தட்டான்சாவடியில் நடை பெற்ற காத்திருப்பு போராட்டத்தில் முதலியார் பேட்டை, அரியாங்குப்பம் ஆகிய  பகுதியில் இருந்து  திரளான பெண்களை அணி திரட்டி போராட்டத்தில் தோழர் தாட்சாயணி பங்கேற்கச் செய்தார். இவரது கணவர் தமிழரசன் பொறியாளர் ஆவர், புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பணியாற்றியவர். அவர்ஏற்கெனவே மறைந்துவிட்டார்.  அங்கன்வாடி ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.  வீட்டு வேலை  செய்யும் பெண்களை சிஐடியு சங்கத்தில்  இணைந்து அவர்களுக்கான போராட்டங் களை  முன்னெடுத்து வீரம் செரிந்த பெண்ணிய போராளியாக களம் கண்டார். தோழர் த.தாட்சாயணியின் மறைவு புதுச்சேரிக்கும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிக்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பு என தலைவர்கள் புகழாரம் சூட்டினர். புதுச்சேரி செயலாளர் ஆர்.ராஜாங்கம்,  மூத்த தலைவர் சுதா, மாநில செயற்குழு  உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்தி ரன், கலியமூர்த்தி, தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சீனுவாசன், பிரபுராஜ்,  சத்தியா, நகரகமிட்டி செயலாளர் மதிவாணன்,பாகூர் இடைகமிட்டி செயலாளர் சரவணன், உழவர்கரைநகர  செயலாளர் ராம்ஜி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலியன், சரவணன் மாதர்  சங்கத்தின் மாநில தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி, அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன் உட்பட திரளானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு சொந்த ஊரான கரையாம்பத்தூரில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.