districts

img

பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு பட்டா கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, பிப். 21 - இந்து ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரர்க ளுக்கு பட்டா கேட்டு எலவனாசூர் கோட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   கூத்தனூர் பல்லவாடி வடுகம்பாளையம், ஏ.அத்திப்பாக்கம்,கொம்மசமுத்திரம், கிராமங்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும், ஏ. புதூர், பரமேஸ்வரிமங்கலம்,கூத்தனூர், ஏ.கோட்டை,காட்டுச்செல்லூர், கிராமங்க ளில் வசித்து வரும் இந்து ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு பட்டா மற்றும் சாதிச் சான்று குடிமனை பட்டா வழங்க வேண்டும், எலவனாசூர்கோட்டை இறை யூர் காட்டு செல்லூர் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும், புகைப்பட்டி காட்டுடையார் கிராமத்தில் அரசு வங்கி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் டி. எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.ஏழுமலை, பி.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.பா.பெரிய சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ஜெயமூர்த்தி, டி.பச்சையப்பன், ஆர்.செல்வராஜ், எம். அர்ஜுனன், என்.கோவிந்தன், கே.அஞ்சலை, எஸ்.மலர். கிளைச் செயலாளர்கள் கே.அசாருதீன், கே.ரங்கதுரை,ஆர்.ராஜகோபால், பி.சிவ சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.