வேலூர், ஜூலை 20- வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி குளறுபடிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர்கள் கோவிந்த சாமி, வீரபாண்டியன் தலைமையில் மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாவட்டக்குழு உறுப்பினர் பெ.திலீபன் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி பேசுகையில், கடந்த 2008ஆம் ஆண்டு வேலூர் நகராட்சி, காட்பாடி பேரூராட்சி கள் இணைக்கப்பட்டு வேலூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. கடந்த 2019இல் நாடு முழுவதும் ஒன்றிய அரசு 100 சீர்மிகு நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்க அறிவிப்பு வெளியிட்டதில் வேலூர் மாநகராட்சி யும் தேர்வு செய்யப்பட்டது. மாநகராட்சி உள்கட்டமைப்பு, அடிப்படை வசதி களை மேம்படுத்த முதலில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. தற்போது 1,350 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டு காலம் ஆகியும் இதுவரை சாலை வசதி, பாதாள சாக்கடை உள்ளிட்ட எந்த பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை. இதனால் மழைக்காலத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒருசில இடத்தில் மின் கம்பங்களை சேர்த்தும், வாகனங்களை புதைத்தும் சாலை அமைத்தனர். பல இடங்களில் சாலை தோண்டப்பட்டுள்ளதால் நகரப் பேருந்து செல்ல முடியாததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் சாலைப் பணிகள் முடிந்துள்ளன. 2019இல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் இன்னும் முழுமை யாக முடிக்கப்படவில்லை. முடிக்கப் பட்ட இடங்களிலும் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கவில்லை. தற்போது மீண்டும் மழை காலம் துவங்குவதால் சாலைகள் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. எனவே மக்களின் வரிப்பணத்தில் உருவாகும் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) பணிகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன், மூத்த தோழர் என்.பிச்சுமணி, நிர்வாகிகள் எம்.கணேஷ், லோ.நவீன், கோவர்த்தனன், நேரு, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.