பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் வியாழனன்று ( மே 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று ( மே 27) பூந்தமல்லி கும்மனஞ்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராபர்ட் எபிநேசர், விசிக நிர்வாகி குமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.