districts

img

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று மையங்களில்  நடைபெற்றன.  திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனும், காஞ்சிபுரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமாரும், படப்பையில் மாவட்டச் செயலாளர் சி.சங்கரும்  கண்டன உரையாற்றினர்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.