கிருஷ்ணகிரி, ஜன.1- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து, பர்கூர் சமுதாயக் கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி உறுதியளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், சிகரலப்பள்ளியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைக்கு வாடகையாக குடும்ப அட்டைதாரர்களிடம் ரூ. 50 வீதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த கடையை அரசு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். கடை வாடகைக்கு 50 விழுக்காடு தொடர்ந்து வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கடசமுத்திரம் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக பட்டா வழங்கி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனை யின் இறந்தோர் உடல் பரி சோதனை கூடம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் காய்கறி சந்தை, பிரதான சாலை சந்திப்பில் அனைவரும் பார்க்கும் நிலையில் உள்ளது. அதை மருத்துவ மனை பின்புறம் மறைவான இடத்திற்கு மாற்ற வேண்டும். பேருந்து நிலையம் ஒட்டியே உள்ள அரசால் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஆளும் கட்சியை சேர்ந்த தனியார் வசம் அவருக்கு மட்டுமே பயன்படும் நிலை யில் உள்ளது. அரசு சமு தாய கூடத்தை மீட்டு ஏழை எளிய பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சென்னை நோக்கி செல்லும் பெரும்பாலான பேருந்துகள் பர்கூர் நக ருக்குள் வராமல் புறவழிச் சாலையில் சென்று வருவ தால் பர்கூர் நகர் பொது மக்களும் வியாபாரிகளும் பயனடையும் வகையில் நவீன பேருந்து நிலையம் பைபாஸ் சாலை ஒட்டி வைக்க வேண்டும். வட்ட தலைநகர் பர்கூரில் நீதிமன்றம்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டி கொடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி பர்கூர் வட்டச் செயலாளர் டி.சீனி வாசன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.கே.நஞ்சுண்டன்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், துணை வட்டாட்சியருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். வெங்கட சமுத்திரம் பெரியார் சமத்துவபுரம் வீடுகளுக்கு 25 நாட்களில் பட்டாக்கள் வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் உள்ள உடல் பரிசோதனை கூடம் உடனடியாக இட மாற்றம் செய்யப்படும். சிகரலப்பள்ளியில் குடும்ப அட்டைதாரர்களிடம் ரூ.50 வசூலிப்பதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.