districts

img

சோக்காடி தலித் மக்களுக்கு நிவாரணம் கேட்டு சிபிஎம் போராட்டம்

கிருஷ்ணகிரி, நவ.6- கிருஷ்ணகிரி மாவட்டத் தில் சோக்காடி தலித் மக்கள்  மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலித் மக்களுக்கு பாது காப்பு நிவாரணமும் வழங்க  கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா ளர் டி.ராஜா தலைமையில் திங்களன்று (நவ.6) கிருஷ்ணகிரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ் சுண்டன் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், கோவிந்தசாமி சிபி. ஜெயராமன், ஜேம்ஸ்  ஆஞ்சலா மேரி,சுரேஷ் வட்ட -ஒன்றிய செயலாளர் கள் சூளகிரி முனியப்பா, போச்சம்பள்ளி சாமு, கெலமங்கலம் ராசா, பொறுப்பாளர் பர்கூர் சீனி வாசன், மாவட்ட குழு  உறுப்பினர்கள் பெரிய சாமி,லெனின் முருகன் கலந்து கொண்டனர்