கள்ளக்குறிச்சி, அக்.3 - கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூக்கனூர் ஊராட்சியில் அடிப் படை கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூக்கனூர் ஆதிதிராவிடர் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைத்துக் கொடுக்கவேண்டும்,சேதமடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும், ஆதிதிராவிடர் மக்களின் பயன்பாட்டில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். மூக்கனூர், உலகுடையாம்பட்டு, சிவபுரம், ஆகிய கிராமங்களில் ஊராட்சி துவக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், மூக்கனூர் சிவபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். மூக்கனூர் பகுதியில் ரேசன் கடையை முறையாக செயல்படுத்தி பொதுவிநி யோகப்பொருள்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதிஅளித்தார். கே.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு எம்.கே.பழனி, மாவட்ட குழு, ஒன்றிய கவுன் சிலர் ச. சசிகுமார்,ஒன்றிய செயலாளர் செ. சிவாஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.மணிமாறன், தா.பாஸ்கர், ஆர்.பச்சை யப்பன், சி.மகாலிங்கம், ஏ.சக்திவேல், பி.முரளி, சு.மேகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.