சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்திடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் மாநகராட்சி ஆணையர் நாராயணனை சந்தித்து மனு அளித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேரு, மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிவப்பிரகாசம், நகரக்குழு உறுப்பினர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.