கள்ளக்குறிச்சி, மே.4 - குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுகொடுத்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் குடிநீர் பிரச்சனை அதிகம் உள்ள கிராமங்களில் கோடை காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திடவும், பழுதாகும் மின் மோட்டார்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்து குடிநீர் விநியோகத்தினை முறையாக வழங்கிடவும்,களமருதூர், ஆத்தூர், நன்னவரம், செல்லூர்,ஒரத்தூர், கிள்ளனூர், அரளி,நெமிலி பஞ்சாயத்துகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது இந்த பகுதிகளுக்கு குடிநீர் வசதி உடனே செய்து தரவேண்டும் என்று திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் இ.அலமேலு,ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.அய்யனார்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.ஆனந்த்ராஜ், பி.சுப்பிரமணி, டி.சிவகுமார், கிளைச் செயலாளர்கள் பி. மாணிக்கம் எம். வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக கூறினார்.