districts

img

குடிமனைப்பட்டா வழங்க கோரி சிபிஎம் மனு

வேலூர்   பலவன்சாத்து பகுதியில் 250 க்கு மேற்பட்ட வீடுகளை  காலி செய்ய வேண்டுமென மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. இதனை தடுத்து அதே பகுதியில் குடிமனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் அப்பகுதியை சார்ந்த  10க்கும் மேற்பட்ட பெண்கள்  கோரிக்கை மனு அளித்தனர். இச்சந்திப்பின் போது சிபிஎம் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, வேலூர் (தெற்கு) தாலுக்கா செயலாளர் எஸ்.செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.