சுனாமியால் பாதிக்கப்பட்ட நொச்சிக்குப்பம், நொச்சி நகர் மீனவ மக்களுக்காகவும், விரிவடைந்த குடும்பங்களுக்காகவும் தமிழ்நாடு நகர்ப்பு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1188 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் 108 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். எஞ்சிய வீடுகளை விடுபட்டவர்களுக்கும், விரிவடைந்த குடும்பங்களுக்கும் வழங்க தமிழக அரசை வலியுறுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை நிர்வாகிகள் எஸ்.ரூபேஷ்குமார், ஆர்.பாரதி, ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் மனு அளித்தனர். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.ஜெயசங்கரன் உடன் உள்ளனர்.