சென்னை, ஜூன் 18- வடசென்னையின் அடிப்படை தேவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிறன்று (ஜூன் 18) 200க்கும் மேற்பட்ட மையங்களில் துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “வடசென்னை வளர்ச்சிக்கு 1000 கோடி, வடசென்னையின் தேவை களை பூர்த்தி செய்யுமா? என்ற முழக் கத்தை முன்வைத்து ஜூன் 18 முதல் ஜூன் 25 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. அரசு புறம்போக்கு, நத்தம் புறம் போக்கு ஆட்சியர் நிலம் போன்ற பகுதி களில் நீண்டகாலமாக குடியிருப் பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், மாசற்ற வடசென்னை உருவாக்க வேண்டும், பதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கழிவுநீர் இணைப்பு களை விரைந்து வழங்கி முறையாக பரா மரிக்க வேண்டும்.
மழைநீர் வடிகால் அமைத்திடுக
முறையாக அனைத்து பகுதி களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும், அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், மாண வர்களின் எண்ணிக்கைக்கேற்ப வகுப்பறைகளை அதிகப்படுத்த வேண்டும், வார்டுக்கு ஒரு நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும், அம்பத்தூர், வியாசர்பாடி, காட்டூர் தொழிற்பேட்டைகளின் உட் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.
தலைவர்கள் பங்கேற்பு
ராயபுரத்தில் பகுதிச்செயலாளர் எஸ்.பவானி தலைமையில் நடை பெற்ற இயக்கத்தை வட சென்னை மாவட்டச் செயலாளர் எல் சுந்தர ராஜன் துவக்கி வைத்தார். ஆர்.கே. நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், பகுதிச்செயலாளர் வெ.ரவிக்குமார், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் விமாலா, திரு வொற்றியூரில் மாவட்ட செயற்குழு உறு ப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் கதிர்வேல், பெரம்பூரில் செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்மு கம், பகுதிச்செயலாளர் அ விஜய குமார், மாதவரத்தில் செயற்குழு உறுப் பினர் வி.ஜானகிராமன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆனந்தன், பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், மணலி யில் செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி, பகுதிச் செயலாளர் பாபு, திருவிக நகரில் செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ்குமார், கொளத்தூரில் செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கிய லட்சுமி, பகுதிச்செயலாளர் பா.ஹேமா வதி, அம்பத்தூரில் செயற்குழு உறுப்பி னர் எல்.பி.சரவணதமிழன், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், அவடியில் செயற்குழு உறுப்பினர் எம்.பூபாலன், பகுதிச்செயலாளர் அ.ஜான் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த இயக்கம் நடைபெற்றது.