districts

img

வி.கே.டி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கடலூர்,அக்.2- பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வது மாநாடு  ஏ.தேவராஜ், எஸ்.மகாலட்சுமி, ஜி.முகமது நிசார் அஹமது ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  மாநாட்டு கொடியை எஸ்.ஜீவானந்தம் ஏற்றி வைத்தார். அஞ்சலி  தீர்மானத்தை ஆர்.ராஜேந்திரன் முன்மொழிந்தார். எஸ்.சங்கர் வரவேற்புரையாற்றினார். கடலூர் மாவட்ட செயலாளர்  கோ.மாதவன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். வேலை அறிக்கையை நகர செயலாளர் ஆர்.உத்தராபதி  சமர்பித்தார். ஜி.தினேஷ் தீர்மானத்தை முன்மொழிந்தார். செயற்குழு  உறுப்பினர்கள் வி. சுப்புராயன், வி.உதயகுமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். என்.ராஜேஷ் கண்ணா நன்றி கூறினார். தீர்மானங்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவை துவக்கிட வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை உடனே துவக்க வலியுறுத்தி   அக். 22 அன்று பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது, பண்ருட்டி ரயில் நிலை யத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி யும், விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வலியுறுத்தி நவம்பரில் ரயில்  மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 11 பேர் கொண்ட பண்ருட்டி நகர குழுவிற்கு ஏ. தேவராஜூலு தேர்வு செய்யப்பட்டார்.