districts

வாயு கசிவு ஆலையை கண்டித்து போராடியவர்கள் மீது பொய் வழக்கு

சென்னை, டிச. 29- எண்ணூர்  கோரமண்டல் தொழிற்சாலை நச்சு வாயு வெளியிட்ட தைக் கண்டித்து போராடியவர்கள் மீது  போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்  பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் 26.12.2023 ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியள வில் அளவுக்கதிகமாக அமோனியா வாயு கடல் வழியாக வெளிவந்து விபத்து ஏற்பட்டது. அமோனியா வாயு  வெளியேறியதால் அந்தப் பகுதியில்  உள்ள பெரிய குப்பம், சின்ன குப்பம்,  தாழங்குப்பம் உள்ளிட்ட 18 கிராமங்க ளில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் மயக்கம் ஏற்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகினர். சுமார் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலில் மீன்களும் செத்து மிதக்கிறது. ஏற்கனவே, பெருவெள்ளத்தின் போது எண்ணை கசிவால் பாதிக்கப் பட்ட மக்கள் அதில் இருந்து மீண்டு  வருவதற்கு முன்பே இத்தகைய  துயரச் சம்பவம் நடந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர்.  மேற்படி கோரமண்டல் உரத் தொழிற்சாலையால் இந்த பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இத்தகைய அமோனியா வாயு அதிகமாக வரும்போதெல்லாம் மக்கள்  தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தும்போது கட்டுப் படுத்துவதும், பின்பு இதே நிலை தொடர்வதாக உள்ளது. இந்த நிலை  தொடரக்கூடாது என்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத் தாமல் ஆலையை இயக்கக்கூடாது என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேற்படி விபத்து நடைபெற்ற தினத்தன்று பொதுமக்கள் மேற்படி ஆலையின் முன்பு கூடி பாதுகாப்பை வலியுறுத்தி போராடியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வொற்றியூர் எண்ணுார் பகுதிக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி உள்ளிட்டு அப்பகுதி ஊர் பிரமுகர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 294பி,  353, 506/2 ஆகிய பிரிவுகளில் வழக்கு  பதிவு செய்து மிரட்டி வருகின்றனர். நடந்த துயர சம்பவத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாத்து, இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு மாறாக, அநியாயத்தை தட்டிக் கேட்பவர்கள் மீதே வழக்குப் போடுவது அநீதி இழைப்பதாகும். மேலும், விபத்துக்கு காரணமான ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப் போடுவது குற்றமிழைத்த தொழிற்சாலை நிர்வாகத்திற்கு துணை புரிவதாகும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு இத்தகைய நடவடிக்கை யில் ஈடுபட்ட ஆவடி காவல் ஆணையர கத்திற்குட்பட்ட எண்ணூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் உயர்  அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும், போராடிய வர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரக ஆணை யர், ஆவடி சரக இணை ஆணையர் ஆகியோருக்கும் இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.