தனியார் வசம் காலை உணவுத் திட்டம் சிபிஎம் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை, நவ. 29- காலை உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடை பெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்கும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது வாரத்தில் 5 வேலை நாட்களில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்கும் நட வடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், பா.விமலா, சரஸ்வதி, பிரியதர்ஷினி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரேணுகாதேவி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல்வேறு திட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தை களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்தவர்கள் இறந்த வர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட 14 வருடங்கள் கால இடைவெளி திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. புதிய நிபந்தனைகள், விதி முறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தாம்பரம், அண்ணாநகரில் இன்று மின்சாரம் நிறுத்தம்
சென்னை,நவ.29- தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் வியாழனன்று (நவ.30) தாம்பரம், அண்ணா நகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, சிட்லபாக்கம் மெயின் ரோடு, செல்லி நகர், சுந்தரம் காலனி, எழில் நகர், கம்பர் தெரு, 100 அடி ரோடு, அண்ணா தெரு, ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், சந்தான லட்சுமி தெரு, ஆதி லட்சுமி தெரு, விஜயலட்சுமி தெரு, அன்னை நகர் மற்றும் சவுபாக்கிய லட்சுமி தெரு, ராதாநகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், பாத்திமா நகர் மற்றும் கண்ணம்மாள் நகர். அண்ணாநகர் பகுதியில் மதுரவாயல், கிருஷ்ணா நகர், ருக்மணி நகர், பாரதி நகர், எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3,912 நபர்களுக்கு வேலை வாய்ப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
திருவள்ளூர், நவ.29- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் புதனன்று (நவ 29) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு கருத்தரங்கத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்றார். இதில் 20 தொழில் நிறுவனங்கள் சார்பாக 3,912 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் ரூ.822.83 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), க.கணபதி (மதுரவாயல்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுக புத்திரா மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ.சேகர், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயஸ்ரீ ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டா வழங்க வேண்டும்: மலைவாழ் மக்கள் கோரிக்கை
திருவள்ளூர், நவ 29- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வில்லிவாக்கம் ஒன்றியம் பாண்டீஸ்வரம் வேலன் நகரில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பாண்டீஸ்வரம், பாலவேடு, கேளம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து பழங்குடி இன மக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இ.கங்காதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.குமரவேல். மற்றும் மூர்த்தி ஆகியோர் பேசினர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட முகாம்
கள்ளக்குறிச்சி, நவ.29- முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் டிசம்பர் 2 அன்று சங்கராபுரம், வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சிறப்பு பதிவு செய்ய முகாம்கள் நடைபெறுகிறது. அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் இம் முகாம் நடை பெறுகிறது. இதுவரை முதலமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை யுடன் வந்து பதிவு செய்து கொண்டு பயனடையலாம். மேலும் இம்முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்தில் வந்து பதிவு செய்து கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித் துள்ளார்.
கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது
கிருஷ்ணகிரி,நவ.29- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், மத்தி கிரி, பாகலூர், தேன்கனிக் கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் பகுதிகளில் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை காவல்துறையில் தேடி வந்ததுடன் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர், பொது மக்களுக்கு இடையூறாக பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களை காவல்துறையி னர் கைது செய்தனர்.
விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
திருவண்ணாமலை,நவ.29- தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதை யொட்டி, மாவட்டங்களில் மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வகையில் கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கோ-கோ, கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கள் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் நவ. 30 முதல் டிச.1 வரை சென்னையில் நடைபெறுகிறது. 1.1.2005 அன்றோ அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்று மற்றும் 1.1.2010க்கு முன்பு நகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் 5 வருடங்களுக்கு முன்பு வழங்கிய பிறப்புச் சான்று கொண்டு வரவேண்டும். மாநில அளவிலான தேர்வுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தினப்படி மற்றும் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 04175233169 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
அம்ருத் திட்டத்தில் திண்டிவனம், உளுந்தூர்பேட்டை சேர்க்க வலியுறுத்தல்
விழுப்புரம்,நவ.29- மக்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4 அன்று தொடங்க உள்ள நிலையில், விழுப்புரத்தில் வணிகர் அமைப்புகள், தொழிற்சங் கங்கள், பொதுநல அமைப்பு களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துரை.ரவிக்குமார் எம்பி பேசுகையில், “சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, விழுப்புரத்தில் அந்த ரயில் நின்று செல்லாது என்று தான் அறிவித்தார்கள். ஆனால், தமிழ்நாட்டின் ரயில் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் விழுப்புரத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும். இதன்மூலம் விழுப்புரம் மட்டுமல்லாது, அருகிலுள்ள மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில், அந்த ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப் பட்டது. அம்ரித் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ், விழுப்புரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் திண்டிவனம், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையங்களையும் சேர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்” என்றார். இந்த கூட்டத்தில் பேரா சிரியர் பிரபா கல்விமணி, வர்த்தக சபையைச் சேர்ந்த பிரகாஷ், பங்குத்தந்தை ரஃபேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.