districts

img

சிதம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநரை துணைத் தலைவராக்கிய சிபிஎம்!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்றது. சிதம்பரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு வார்டு ஒதுக்கப் பட்டது. இரண்டு வார்டிலும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இதில், 33-வது வார்டில் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமரன் (41)  வெற்றி பெற்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் வைத்தீஸ்வரி என்ற விவசாயம் இளங்கலை பயிலும் மகளும் யோகேஸ்வரன் 9ஆம் வகுப்பு பயிலும்  மகனும் உள்ளனர்.  சாதாரண குடும்ப பின்புலத்தை கொண்ட முத்துக்குமரன் கடந்த 20  ஆண்டுகளுக்கு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆட்டோ நிறுத்தில் ஆட்டோ ஓட்டுநராக தொழிலை தொடங் கினார். ஆட்டோ ஓட்டுநர்களின் நலனில்  அதிகம் அக்கறைக்கொண்ட முத்துக் குமரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய சிதம்பரம் நகர  செயலாளராக ராஜா மூலம் சிஐடியு சங்கத்தில் உறுப்பினரானார். அதனைத் தொடர்ந்து, சங்கத்தில் தீவிரமாக ஆட்டோ சங்க சிஐடியு கிளைச் செயலாளரானார். படிப்படியாக மற்றப் பகுதிகளிலும் ஆட்டோ ஓட்டுநர்களை சங்கத்தில் அணித்திரட்டுவதில் முன்முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர், ஆட்டோ சங்க சிஐடியு மாவட்டச் செயலாளராக தேர்வு செய்ய ப்பட்டார்.

தற்போது மாவட்ட தலை வராகப் பணியாற்றி வருகிறார்.  இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை யால் ஈர்கப்பட்டு தன்னை கட்சி உறுப்பி னராக இணைத்துக் கொண்டார். சிதம்பரம் நகரக்குழு உறுப்பினராக இருந்த முத்துக்குமரன் தற்போது கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு  நடவடிக்கையின்போது நாடே முடங்கி யது. இதில் சிதம்பரம் நகரமும் தப்ப வில்லை. வீட்டை வெளியே வரவே பயந்த அந்தக் காலக் கட்டத்தில் சிதம்ப ரம் நகரப் பகுதியில் ஆட்டோ சங்க  சிஐடியு உறுப்பினர்களை ஒருங்கி ணைத்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, கொரோனா  நோயாளி களை மருத்துவமனைக்கு இலவச மாக அழைத்துச் செல்வது பின்னர் சிகிச்சை முடிந்து அவர்களை வீட்டுக்கு அழைத்து வரும் சேவையை செய்து வந்தார். மேலும், நிவாரண உதவிகள் வசூ லித்து ஏழை, எளியவர்களுக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த முத்துக்குமரன் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் பாராட்டு தெரிவித்து சான்றும் வழங்கிக் கவுரவித்தார். ஏழ்மை நிலையிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக ஓட்டுநர் உரிமம், சீறுடை பெற்றும் கொடுத் துள்ளார். மேலும் ஆட்டோ தொழிலா ளர்களுக்கு எதிரானஅடக்கு முறை களை கண்டித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.  

சிதம்பரம் நகராட்சியின் நீர்வழி ஆக்கிரமிப்பு என 100-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க வந்தபோது அதிகாரிகளிடம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் ஏழ்மை நிலை களை எடுத்துகூறியும், மாற்று வீடு  கட்டிகொடுத்த பிறகே இந்த வீடுகளை  இடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்  போராட்டத்தை நடத்தி வெற்றியும் கண்டவர். இந்த பின்னணியில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகராட்சியின்  33-வது வார்டில், திமுக தலைமையிலான   மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களம்  இறக்கப்பட்டு வெற்றி பெற்று கவுன்சிலாக தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர் நடந்த கூட்டணி ஒதுக் ்கீட்டில் சிதம்பரம் நகராட்சி துணை தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனைத்  தொடர்ந்து கட்சியின் சார்பில் முத்துக்குமரன் நகராட்சி துணைத்  தலைவர் வேட்பளராக அறிவிக்கப் பட்டார். கூட்டணி கட்சியின் முழு ஒத்து ழைப்போடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் முத்து குமரன் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக பதவி யேற்றுக்கொண்டு வெளியே வந்த முத்துக்குமருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். சிபிஎம் தலை வர்களும் கூட்டணி கட்சித் தலைவர்க ளும் மாலை அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர். பிறகு, தினந்தோறும் ஆட் டோவை நிறுத்தும் பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்திற்கு ஆட்டோவில் கட்சித் தலைவர்களுடன் சென்றார். அங்கு சக ஆட்டோ ஓட்டுநர்கள் பட்டாசு  வெடித்தும் மாலை அனிவித்து  உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்த ஆட்டோவை ஓட்டிக் கொண்டு 33ஆவது வார்டில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பெண் கள் பலடங்களிலும் ஆரத்தி எடுத்து வரவேற்றும் வாழ்த்து கூறினர்.  நகர்மன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகும், ஆட்டோ ஓட்டி வந்து பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.