கடலூர்,நவ.2- “தென்னாட்டின் ஜான்சி ராணி” என மகாத்மா காந்தியடிகளால் அன்போடு அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாள் 1937, 1946, 1952 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமரசம் இன்றி போராடினார். கர்ப்பிணியாக இருந்த போதும் சிறையில் இருந்து பரோலில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டு மீண்டும் சிறை சென்றவர். அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.25 லட்சத்தில் கடலூர் முதுநகர் மாநக ராட்சி காந்தி பூங்காவில் சிலை அமைக்கப்பட்டது. சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச் செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், பாமக மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் திமுக நகரச் செயலாளர் கே.எஸ். ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அஞ்சலை யம்மாளுக்கு சிலை அமைக்க வேண்டும், கடலூரில் ஒரு தெருவிற்கு அஞ்சலை அம்மாள், பெயர் சூட்ட வேண்டும் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் சிலை அமைப்ப தற்கான ஏற்பாடு செய்து வியாழனன்று திறப்பு விழா நடைபெற்றது. அஞ்சலை அம்மாள் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி. சுப்புராயன், பி. கருப்பையின், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, மாநகர குழு உறுப்பினர்கள் சாந்தகுமாரி, ஸ்டாலின், செந்தில், தேவநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.