districts

img

பொதுமக்களின் கதறலையும் பொருட்படுத்தாமல் ஈகுவார்பாளையத்தில் வீடுகள் இடிப்பு

திருவள்ளூர், பிப் .14-   கும்மிடிப்பூண்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 70க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மற்றும் கிராம மக்களை  காவல்துறையினர் குண்டுக் கட்டாக தூக்கி  கைது செய்த னர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிர மிப்புகளை அகற்ற உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் பிப் 14க்குள் வீடு களில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் 14ஆம் தேதி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப் படும் என வீட்டின் உரிமை யாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும் வீட்டின் முகப்பு களில் நோட்டீசை ஒட்டினர். இந்த நிலையில் வெள்ளி யன்று (பிப்.14), 250 க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 100க்கும் மேற்பட்ட வனத்துறை யினர் குவிக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் பீச்சி அடிக்கும் வஜ்ரா உள்ளிட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க ஏதுவாக மின்வாரிய அதிகாரிகளும்,  குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உள்ளாட்சி துறை ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர். ஆக்கிர மிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்ததை அறிந்த கிராம மக்கள் 100 கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஊர் எல்லை யில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தலைமுறை,  தலைமுறை களாக குடியிருந்து வரும் வீடு களை இடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பொது மக்கள் தெரிவித்தனர். மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வசதி என அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கி உள்ள நிலையில் தற்போது தான் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்று தெரிய வந்துள்ளதா என கேள்வி எழுப்பினர். இந்த சூழலில் திடீரென வீடுகளை இடித்தால் எங்கே வசிப்பது  என  கேள்வி எழுப்பினர்.  போதிய கால அவகாசம் வழங்காமல் வீடுகளை இடிப்ப தால் பொருட்கள் அனைத்தை யும் வீடுகளில் இருந்து வெளியே எடுத்து எங்கு கொண்டு செல்வது என தெரியா மல் நிற்பதாக கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கதறி கண்ணீர் மல்க தெரி வித்தனர்.

குழந்தைகளின்  தேர்வு காலம்

விவசாயம், கூலித் தொழில் செய்து வரும் கிராமத்தை விட்டு வெளியே எங்கு செல்வது எனவும் மாண வர்களுக்கு தேர்வு வரவுள்ள நிலையில் கிராமத்தை விட்டு வெளியேறினால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கும் எனவும் தெரிவித்தனர். சாதி,  மத பாகுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக இருக்கும் நவீன சமத்துவபுரமாக இந்த கிராமம் விளங்குகிறது. இங்குள்ள வீடுகளை இடிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர். ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு தான் உயிர் எனவும் வீட்டை இடித்தாலே உயிர் போனது போன்று என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 2006 சட்டத்தின்படி வன நிலங்க ளில் வாழ்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வும் தற்போது 80 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதிய ளித்துள்ள முதலமைச்சர் வனத்துறை இடத்தில் உள்ள மக்களுக்கும் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதனிடையே ஊருக்குள் அதிகாரிகள் வர எதிர்ப்பு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.ராஜேந்திரன், அ.து.கோதண்டன், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், வட்ட குழு உறுப்பி னர் வெங்கட்டாதிரி, விசிக நிர்வாகிகள் வின்சென்ட், பாமக மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து மேல்பாக்கம் கிராமத்திற்கு உள்ளே சென்று வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர். பின்னர் இயந்திரத்தின் உதவியுடன் வீடுகளை இடிக்க தொடங்கினர். ஓரிரண்டு வீடுகளின் சுற்றுச்சுவர் மற்றும் முகப்பு பகுதியை இடித்தனர். நீதிமன்றத்தில் தடை ஆணை இந்த சூழலில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றுள்ளதாக கிராம மக்கள் கூறினர். இதனையடுத்து நீதிமன்ற தடை ஆணையை சமர்ப்பிக்குமாறு கூறி ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏராளமான காவல்துறையினர் கிராமத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.