districts

img

தீப நகரில் செந்தொண்டர் அணிவகுப்புடன் சிபிஎம் மாவட்ட மாநாடு

திருவண்ணாமலை,டிச. 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட  9 ஆவது மாநாடு திருவண்ணாமலை  நகரில் செந்தொண்டர்களின் உற்சாக அணிவகுப்புடன், சிவப்பு நகராமாக மாறியது. திருவண்ணாமலை காமாரஜர் சிலை அருகிலிருந்து துவங்கிய பேரணியை தொடர்ந்து,  திருவண்ணாமலை நகரம் சர்க்கார் ஜன்னத் மஹாலில், என்.வெங்கடேசன், எம்.ரவி நினை வரங்கத்தில், வைகறை மற்றும் பீம் வெற்றி கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிக ளுடன் நடைபெற்ற பொது மாநாட்டில் மாநாட்டு கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெ.கண்ணன் விண்ணதிர எழும்பிய கோஷத்துடன் ஏற்றி வைத்தார்.  முன்னதாக, தோழர்கள் கே.பி.ஸ்டாலின், ஆர்.கருணாமூர்த்தி மாநாடு நுழைவு வாயிலில், ஆரணியிலிருந்து செயற்குழு உறுப்பினர்கள் இரா.பாரி, பெ.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் சி.அப்பாசாமி ஆகி யோர் கொண்டு வந்த கொடிப் கொடியை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் பெற்றுக்கொண்டார். கலசபாக்கத்திலிருந்து இயக்கத்தின் முன்னோடி  தோழர்கள் கே. வரத ராஜன், டி.இலட்சுமணன், கே.தங்க வேல், எம்.பெருமாள், கே.வெங்க டேசன், என்.வெங்கடேசன், கே.கும ரேசன், கே.பி.ஸ்டாலின், எம்.ரவி, ஆர்.கருணாமூர்த்தி, வைகறை கோவிந்தன் ஆகியோர் நினைவாக கொண்டுவந்த ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி பெற்றுக் கொண்டார்.

தோழர் எஸ்.கருணா நினைவு ஜோதியை மாநில செயற்குழு உறுப்பினர்,  ஏ.லாசர் பெற்றுக்கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.லட்சுமணன், இ.லட்சமி ஆகியோர் தலைமையில் தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் செயற்குழு உறுப்பினர்  கே.வாசுகி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்பு குழு தலைவர் எஸ்.இலியாஸ் சர்க்கார் வரவேற்றார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  ஏ.லாசர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செய லாளர்  எம்.சிவக்குமார்  வேலை அறிக்கையையும், செயற்குழு உறுப்பினர் பெ.கண்ணன் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். திருவண்ணாமலையில் நடை பெறும் இரண்டு நாள் மாநாட்டில், தோழர் எஸ்.கருணா அரங்கில், வரலாற்று ஆவண கண்காட்சியும்,  தோழர் கே.குமரேசன் அரங்கில் பாரதி புத்தகாலயத்தின் புத்தகக் கண்காட்சியும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் எழுதி இசையமைத்த பாடல்கள் வெளி யீடு, மாவட்ட குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரனின் படுகளம் நாவல் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து புதனன்று (டிச.22,புதன்) இரண்டாவது நாள் மாநாடு நடைபெறுகிறது. தீப நகரில் நகரமெங்கம்  அலங்கரி க்கப்பட்ட செங்கொடிகளுடன், ஆர்பரித்து துவங்கியது பேரணி.