திருவள்ளூர், டிச 9- கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் தாமரை ஏரியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (டிச. 7) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் நகர செயலாளர் வி.ஆர். லட்சுமணன் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி பேருந்து மேற்கூரை அமைக்க வேண்டும், பேரூராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நீதிமன்றம், காவல் நிலையம் போன்ற அலுவலகங்க ளுக்கு செல்லும் ரெட்டம்பேடு கூட்டுச் சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும், கோரிமேடு பகுதியில் கால்நடை களின் கழிவு மற்றும் பேரூராட்சியின் குப்பை களை பெரிய ஏரிக்கு அருகில் கொட்டுவதை நிறுத்த வேண்டும், பேரூராட்சிக்கு சொந்த மான மாடுகளை அடைத்து வைக்கும் பவுண்டை மீட்க வேண்டும், தாமரை ஏரியில் மூன்று மதகுகளும் அடைத்து ஆக்கிர மிப்புக்கு வழிவகை செய்துள்ள பொதுப் பணித்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரிய பிரகாஷ் உள்பட பலர் பேசினர்.