கே.பி.பார்க் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், லிப்ட், பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி புதனன்று (ஜூன் 29) வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கே.பி பார்க் கிளைகள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கிளைச்செயலாளர் டி.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எழும்பூர் பகுதிச்செயலாளர் கே.முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர்.