districts

சென்னை முக்கிய செய்திகள்

150வது வட்ட மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்க சிபிஎம் கோரிக்கை

சென்னை, ஏப். 30 - 150வது வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி 150வது வட்டத்தில் போரூர், காரம்பாக்கம், துண்டலம், செட்டியார் அகரம் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க தெருக்கள் மற்றும் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பகுதிகள் முழுமை யாக சீரமைக்கப்படாததால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, அத்தகைய தெருக்கள், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 150வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா கணபதியை அண்மையில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இது தொடர்பாக, கட்சியின் 150வது வட்ட காரம்பாக்கம் கிளைச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், “பாது காக்கப்பட்ட (மெட்ரோ) குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக வழங்கப்படுவதில்லை. ஒரு சில பகுதி களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழங்குவதை மாற்றி அனைத்து பகுதி களுக்கும் தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கொசு மருந்து தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகளை தீவிரப் படுத்த வேண்டும். வட்டத்தில் உள்ள மூத்தகுடிமக்களை கண்டறிந்து ‘வீடுதேடி மருத்துவம்’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களையும் சேர்க்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கவுன்சிலரிடம் வலியுறுத்தினோம். ஆபத்தான கால்வாய் “கிண்டி - பூந்தமல்லி சாலையில் இருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் அணுகு சாலையில் (சர்வீஸ் ரோடு) இடதுபுறமாக உள்ள மழைநீர் கால்வாய் திறந்து கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் மட்டு மின்றி, வாகனத்தில் செல்வோரும் அச்சத்துடன் பயணிக்கின்றனர். ஆகவே, கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். செட்டியார் அகரத்திலிருந்து வான கரத்திற்கு புறவழிச்சாலையில் உள்ள மையத்தடுப்பை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. பொதுமக்களும் வாகனங்களுக்கு நடுவில் நுழைந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த சிரமத்தை போக்க, புறவழிச்சாலையில் உள்ள மையத்தடுப்பை அகற்றி, பாதசாரிகள் கடப்பதற்கான பாதை (ஜீப்ரா கிராசிங்) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரினோம்.  கோரிக் கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பதாக கவுன்சிலர் உறுதி அளித்தார்” என்றும் அவர் கூறினார்.

விவோ  புதிய மொபைல்

சென்னை, ஏப். 30-  விவோ நிறுவனம் எக்ஸ் மாடல் வரிசையில் புதி தாக எக்ஸ்90 மாடல் ஸ்மார்ட்போன்களை அறி முகம் செய்துள்ளது.  அனைத்து கால நிலை யிலும் துல்லியமான புகைப் படங்களை எடுக்கும் வகை யில் வெளிவந்துள்ள எக்ஸ்90 மற்றும் எக்ஸ்90 புரோ ஆகியவை நுகர் போருக்கு சிறந்ததொரு புகைப்பட அனுபவத்தை வழங்கும். சவாலான சூழ்நிலைகளில் கூட சிறந்த, துல்லியமான புகைப் படங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதனால் நுகர்வோர் புகைப்படக் கலைஞர்களைப் போல தாங்கள் விரும்பிய படங்களை மிகத் தெளி வாக எடுக்க முடியும் என்று நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

ஊழியர்களுக்கு ‘ஆப்பிள் ஐபேட்’

சென்னை, ஏப்.30  தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோபோர்ஜ் நிறு வனம் கடந்த மார்ச் மாதத்து டன் முடிவடைந்த காலாண்டு மற்றும் கடந்த நிதி யாண்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு 22.7 சத வீதம் அதிகரித்து இந்திய ரூபாயில் 8,117 மில்லிய னாக உள்ளது.     கடந்த காலாண்டில் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அந்த சாதனையை கொண்டாடும் விதமாக தனது ஊழியர்கள் 21 ஆயிரம் பேருக்கு ‘ஆப்பிள் ஐபேட்டை’ பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. பங்கு தாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 19 ரூபாய் இடைக் கால ஈவுத் தொகையை இயக்குனர் குழு பரிந்துரைத் துள்ளது.

நாளை மின்நிறுத்தம்

சென்னனை.ஏப்,30- சென்னையில் வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி. காரிடர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மயிலாப்பூர்-பெசன்ட் ரோடு, சண்முகம் ரோடு, தாண்டவராயன் ரோடு, தாம்பரம் மெப்ஸ்-மல்லிமா வீதி, தெற்கு மற்றும் கிழக்கு மாடத் தெரு, தங்கவேல் தெரு, சிட்லபாக்கம்-துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஆர்.ஆர்.நகர், காமராஜர் காலனி, காந்தி தெரு, போரூர்-ஜெய் நகர், குன்றத்தூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாணவர்களை பட்டினிபோடும் அவலம்  புதுச்சேரி மாணவர் சங்கம் கண்டனம்

புதுச்சேரி, ஏப். 30- விடுமுறை நாட்களில்  உணவு வழங்காமல் மாணவர்களை பட்டினி போடும் அவலம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு  மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெய பிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் புதுச்சேரியில் மட்டும் 16 மாணவ, மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சமீப காலமாக முறையான உணவு வழங்குவதில்லை. மேலும் மாண வர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் உணவு சமைப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் ஏற்கனவே வாரத்தில் நான்கு நாட்கள் அசைவ உணவும் வழங்கப்பட்டு வந்தது.  கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அந்த அசைவ உணவும் வழங்கப்படுவதில்லை. இப்படி தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளின் நிலமை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் விடுதி களில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது, ஆனால் அவர்க ளுக்கு போதுமான இட வசதி இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. . இந்நிலையில் மதகடிப்பட்டு மகளிர் விடுதியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் இருந்தும், மதிய உணவு சமைக் காமல் மாணவர்களை பட்டினி போட்டுள்ளனர். இந்த செயலை இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே ஆதிதிராவிடர்  நலத்துறை அமைச்சரும்,இயக்குநரும்  உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதையும்,  விடுமுறை நாட்களிலும்  உணவு கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இதே நிலைமை தொடரும் பட்சத்தில் இந்திய மாணவர் சங்கம், அனைத்து மாணவர்களையும் ஒன்று திரட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரித்துள்ளது.

ஆணவக் கொலையாளியை ஒருநாள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

கிருஷ்ணகிரி,ஏப்.30- கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி ஜெகன் கொலை வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரை,ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.     கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டி டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி ஜெகன் அவதானப்பட்டி புழுக்கான் கொட்டாய் சங்கர் மகள் சரண்யாவை காதலித்து மாமனார் சங்கர் எதிர்ப்பை மீறி ஜன வரி 26 ல் திருமணம் செய்து கொண்ட னர். மார்ச் 21 ல் மாமனார் சங்கர் கூட்டாளி களுடன் சேர்ந்து கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் ஜெகனை பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.  கொலையாளிகள் இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நீதிமன்ற காவலில் உள்ளவர்களை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.      ஆனால் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்து விட்டதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து காவல் துறையால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளியான தந்தையிடம் காவல் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டதால், மற்ற இருவரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை" என்று வாதிட்டார்.அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், 15 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைவதற்கு முன்பே  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது என பதில் வாதிட்டார்.விசாரணை முடிவில் நீதிபதி சரணடைந்த குற்றவாளிகள் இருவரையும் ஒருநாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

திருச்சுழி அரசு கல்லூரி கட்டிடப் பணியில் 2  மாணவர்கள் பலி :  பொறியாளர் உட்பட 3 பேர் கைது

திருச்சுழி, ஏப்.30- திருச்சுழி அருகே அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வழக்கில் கட்டிடப் பொறியாளர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிஷ் குமார் (15). அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரவிச்செல்வம் (17) . இருவரும் பள்ளித் தேர்வு முடிவடைந்ததால், மேல் படிப்புச் செலவுக்காக மேலேந்தல் பகுதியில் நடைபெற்று வரும் அரசு கல்லூரி கட்டிடப் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து   திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலை யில்,   கட்டிட பொறியாளர் ஜெயசீலன் ராஜா, மேற்பார்வை யாளர்கள் பால்சாமி,  விஜயராகவன் ஆகியோரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி கடற்கரை சாலை மகிழ்ச்சி சாலையாகிறது

புதுச்சேரி.ஏப்,30-  புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான 1 1/2 கி.மீ. அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது.  கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், சுங்கத்துறை அலுவலகம் என அழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளது. இந்த கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக (மகிழ்ச்சி சாலை) மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்து தருவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டின் நோக்கமாகும்.  ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் இந்த சாலையை பயன்படுத்தலாம். நடனம், நாட்டியம், ஓவியம், வேடிக்கை, விளையாட்டு என எதில் தனி திறமை இருந்தாலும், குழு திறமை இருந்தாலும் மக்கள் முன்பு வெளிப்படுத்தலாம். பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி தரப்படும். அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெளி நாடுகளில் உள்ளதுபோல புதுவை கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற சுற்றுலாத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

காலமானார்    

ராணிப்பேட்டை, ஏப்.30– ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி பகுதியை சேர்ந்த இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் முன்னாள் மாநில தலைவர் எம். சிவராமனின் துணைவியார் எஸ். எழிலரசி (வயது 66) ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) உடல்நலக்குறைவால் காலமானார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியினர் மற்றும் வங்கி ஊழியர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.